தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு

Mayoorikka
2 years ago
தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு

தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலத்தை நீடிக்க, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கோ வந்து ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.