கழுத்து நெரித்து கொல்லப்பட்ட விகாராதிபதி சீடர் தப்பியோட்டம்

Kanimoli
2 years ago
கழுத்து நெரித்து கொல்லப்பட்ட விகாராதிபதி  சீடர் தப்பியோட்டம்

ரத்தொலுவ ஸ்ரீ நந்தாராம விகாரையின் விகாராதிபதி மகாநாம தேரர், விகாரையின் அறைக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விகாரையின் பக்கமாக இருந்து சத்தம் வந்ததால் கிராம மக்கள் இது குறித்து காவல்துறையிடம் கூறியதையடுத்து, காவல் துறையினர் வந்து விகாரையை ஆய்வு செய்தனர். இதன்போது அவர் தங்கியிருந்த படுக்கையின் அறையில் கழுத்தில் ஏற்கனவே அங்கியால் நெரிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை
சில தினங்களுக்கு முன்பு இந்தக் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலையுடன்,தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படும் கோவிலில் தங்கியிருந்த 18 வயதுடைய கோல தெரணம காணாமல் போயுள்ளார். நேற்று மாலையும் அவர் கோவிலில் தங்கியிருந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

விஹாராதிபதி தேரருக்கும் கோல தேரருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருவதுடன் இது தொடர்பில் காவல்துறைக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தப்பியோடிய அவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரை கண்டுபிடித்தால் இந்த கொலையின் மர்மத்தை வெளிக்கொண்டு வரலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கோல தேரோ, விஹாராதிபதியை கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.