13 வது திருத்தச்சட்டம் தமிழர்களின் நிரந்தர தீர்வல்ல சுரேந்திரன் குருசாமி

Kanimoli
2 years ago
 13 வது திருத்தச்சட்டம் தமிழர்களின் நிரந்தர  தீர்வல்ல சுரேந்திரன் குருசாமி

51வது மனித உரிமை கூட்டத் தொடருக்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்திருக்கும் சுரேந்திரன் குருசாமி அவர்கள் பக்க அறைகளில் நடந்த கூட்டத் தொடர்களில் பல வெளிநாட்டுப் பிரமுகர் உடனான சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலம் தமிழர்களின் பிரச்சினை பற்றியும் அவர்களுக்கான  தீர்வுத் திட்டங்கள் பற்றியும் பல விளக்கங்களை அளித்துள்ளார்.  

அத்துடன்  13வது திருத்தச் சட்டம் என்பது தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு அல்ல அதனைப் பெற்று வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு மிகவும் சிறப்பாக அமையும் என்பது  அவர்களுடையஒரு கருத்தாக  அமைகிறது. மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும், தற்போதைய நாட்டின் அரசியல் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீள்வதற்கான சில வழிமுறைகள் பற்றியும் பல நாட்டு பிரமுகர்களுக்கும் தமது கட்சி  சார்பாக பல விளக்கங்கள் அளித்துள்ளதாக எமது செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளார்.