கடுவலை பிரதேச மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நீர் வெட்டு

Kanimoli
2 years ago
கடுவலை பிரதேச மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நீர் வெட்டு

 கஹஹேன, ஹங்வெல்ல, ஜல்தர ரணால, கடுவளை, மாபிட்டிகம மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர்த்தாங்கியை சுத்தப்படுத்தும் பணி காரணமாக குறித்த பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.