அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குக - ஒப்பனை தொழில்துறை சம்மேளனம்

Kanimoli
2 years ago
அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குக - ஒப்பனை தொழில்துறை சம்மேளனம்

அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் கோரியுள்ளது.

இலங்கை சுங்கத் தரவுகளின்படி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டிற்கும் (1 ஜனவரி 2021 - 31 ஜூலை 2022) மொத்த இறக்குமதி கட்டணத்தில் 0.1% ஐ விட அதிகமாக இல்லை என்று CCI அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒப்பனைப் பொருட்களின் இறக்குமதிக்கான தற்காலிகத் தடையானது, நாட்டிற்கு அன்னியச் செலாவணியை உருவாக்கக்கூடிய பல அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான தொழில்களையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக அழகுசாதன தொழில்துறை சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதன்மூலம் எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு தற்காலிக தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு சிசிஐ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.