மின் கட்டண அதிகரிப்பு - புதிய திட்டம் தொடர்பில் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு

Prasu
2 years ago
மின் கட்டண அதிகரிப்பு - புதிய திட்டம் தொடர்பில் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு

இலங்கையில் கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போதைய மின் கட்டண அதிகரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய திட்டமொன்று தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

அதன்படி, விகாரைகளுக்கும் ஏனைய மத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் சூரிய சக்தியிலான மின் உற்பத்தி முறைமையை பயன்படுத்துவதற்கு திட்டமொன்றை வகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.