புகையிரத உதிரிபாகங்கள் இல்லாத காரணத்தினால் சுமார் 14 தினசரி ரயில் பயணங்களை நிர்வாகம் ரத்து செய்துள்ளது

Kanimoli
1 year ago
புகையிரத உதிரிபாகங்கள் இல்லாத காரணத்தினால் சுமார் 14 தினசரி ரயில் பயணங்களை நிர்வாகம் ரத்து செய்துள்ளது

புகையிரத உதிரிபாகங்கள் இல்லாத காரணத்தினால் சுமார் 14 தினசரி ரயில் பயணங்களை நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ரயில்களுக்கான லூப்ரிகண்டுகள் மற்றும் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளுக்கான பல்வேறு உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தப் பிரச்சனைகளில் ரயில்வே நிர்வாகம் விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறதா என்பதும் பிரச்னையாக உள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கமும் கூறுகிறது.