இலங்கையிலிருந்து 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர மலேசிய அமைச்சரவை ஒப்புதல்

Kanimoli
1 year ago
இலங்கையிலிருந்து 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர மலேசிய அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையிலிருந்து 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர மலேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

“இந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு முதலாளிகளையும் வணிகங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று சரவணன் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.