இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழப்பு!

Mayoorikka
1 year ago
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 1 ஆணும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,655 ஆக அதிகரித்துள்ளது.