ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி – ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

Mayoorikka
1 year ago
ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி – ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி சிண்டி மெக்கெய்ன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இவ்விடயத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். 

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் மற்றும் அவசர மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயற்படும் வழிகளை ஆராய்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அமெரிக்க தூதவர் ஜூலி சங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.