போராட்டம் நடத்த அனுமதி வாங்க வேண்டாம்! ஜோசப் ஸ்டாலின்

Mayoorikka
1 year ago
போராட்டம் நடத்த அனுமதி வாங்க வேண்டாம்! ஜோசப் ஸ்டாலின்

உயர்பாதுகாப்பு வலயமாக நியமிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே பெரும் பகுதிகள் பிடிக்கப்படும் என்பதால் கொழும்பில் எங்கும் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  தெரிவித்தார்.

உதாரணமாக, கொழும்பு விமானப்படைத் தளத்தை எடுத்துக் கொண்டால், அதில் பெய்ரா ஏரி மற்றும் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையான பகுதிகள் உள்ளடங்கும்.


போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்றும், போராட்டக்காரர்கள் என்ற முறையில் யாரிடமும் அனுமதி வாங்க மாட்டோம் என்றும் கூறினார்.