சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது

Kanimoli
1 year ago
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள், பெண்  மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை(27.09.2022) இரவு தலைமன்னார் கடல் ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்றுள்ளனர்.

 கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரும் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (06-10-2022) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் 18 வயதுக்கு குறைந்த ஏனைய மூன்று சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.