10.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீன பிரஜைகள் கைது!
#SriLanka
#Arrest
#Airport
#Ciggerette
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
சுமார் 10.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நான்கு சீன பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசுமை வழித்தடம் வழியாக வெளியேற முயன்றபோது, விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்ட சந்தேக நபர்கள், இலங்கை சுங்க அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டனர்.
அவர்கள் வசம் இருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகள் அடங்கிய 360 அட்டைப் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் தாய் ஏர்வேஸ் விமானம் TG307 மூலம் பாங்காக்கிலிருந்து இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே