மாணவர்களுக்கு இன்று முதல் கஞ்சி கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Mayoorikka
1 year ago
மாணவர்களுக்கு இன்று முதல் கஞ்சி கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் கஞ்சி கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக ஆயிரம் பாடசாலைகளில் இவ்வாறு கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பதற்காக கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.