பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு

Kanimoli
1 year ago
 பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (07.10.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்த்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்துக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.