ராஜபக்ச அணியினர் கொள்ளையடித்த பணத்தை தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் - மனோ கணேசன்

Kanimoli
1 year ago
ராஜபக்ச அணியினர் கொள்ளையடித்த பணத்தை தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் - மனோ கணேசன்

ராஜபக்ச அணியினர் கொள்ளையடித்த பணத்தை தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முதலில் செய்வதற்கு தயாராக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். 

இந்த நாட்டில் வருமான வரி பற்றி கருத்துக்களை முன்வைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களால் கொள்ளையடித்து களவாடப்பட்ட பணம் உகண்டாவிலா, துபாயிலா, சிங்கப்புரிலா, ஐரோப்பாவிலா இருக்கின்றது என்பதனை தேடி கண்டு பிடித்து இலங்கைக்கு கொண்டு வருவதுடன் கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க வெறும் நடிகர் மட்டும்தான் மற்ற ஏனைய திரைக்கதை, வசனம், தயாரிப்பு அனைத்துமே ராஜபக்ச குடும்பமே என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.