கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் பிறந்தநாள் அன்றே உயிரிழந்த இளைஞர்

Prasu
3 years ago
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் பிறந்தநாள் அன்றே உயிரிழந்த இளைஞர்

கனடா மார்க்கமில் கடந்த வாரம் இடம்பெற்ற வித்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் உறவினர்கள் பதில்களை எதிர்பார்க்கிறார்கள்.

இந்த விபத்தில் 21 வயதான படீரன் புவனேந்திரன் மற்றம் 23 வயதான நிலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் மாமாவான சுவென் பூபாலசிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.

இது எதையும் மாற்றப்போவதில்லை. ஆனால், வேறு எந்த குழந்தைகளுக்கும் இவ்வாறு நடக்காமல் இருக்க, எங்களுக்கு ஏதாவது ஒரு நீதி வேண்டும்.

தனது பிறந்தநாளில் உயிரிழந்த வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழக மாணவர் படீரன் புவனேந்திரன் மற்றும் ஜார்ஜ் பிரவுன் கல்லூரி மாணவி நிலுக்சனா புவனேந்திரன்ஆகியோரின் இறுதிச் சடங்குகளை பூபாலசிங்கம் ஏற்பாடு செய்து வருகிறார்.

டாஷ்போர்டு கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கின் வடக்கே மார்க்கம் ரோடு மற்றும் எல்சன் வீதியில் டிரக் வண்டி கார் மீது மோதியதை காணொளி காட்டுகிறது. 

பிற்பகல் 2:05 மணியளவில் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். 46 வயதான டிரக்கின் சாரதி காயமின்றி சம்பவ இடத்திலேயே இருந்ததாக யோர்க் பிராந்திய காவல்துறை கூறுகிறது.

சனிக்கிழமை வரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

விபத்தை நேரில் பார்த்த யாரேனும், அவர்கள் ஏற்கனவே காவல்துறையிடம் பேசவில்லை என்றால், அவர்கள் முன் வருமாறு புலனாய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4