சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் மக்கள்

#Protest #France
Prasu
1 year ago
சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் மக்கள்

பிரான்ஸ் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும்  என கூறி  நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். 

மேலும் பல தொழில் சங்கங்கள் இதில் கலந்து கொள்ள  பல தொழில் சங்கங்களுக்கு  அழைப்பு விடுத்துள்ள நிலையில் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விலைவாசி உயர்வதுடன் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த கோரி நாட்டில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று சில நாட்கள் ஆகிறது. இது  தொழில்துறை நடவடிக்கை  மற்றும் எரிபொருள் விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளது. 

இந்த வேலை நிறுத்தம் முழுமையாக  பொது துறையை பாதித்துள்ளது. அதிலும் பள்ளிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்தை பொருத்தவரை வேலை நிறுத்தம் காரணமாக லண்டன் மற்றும் பாரீஸ் இடையே சில ரயில்களை ரத்து செய்வதாக ரோஸ்டார் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலைகள் வெளியேற முடிவு செய்த பிறகு வேலை நிறுத்தங்கள் பரந்த அளவில் வளர்ந்தது. கடந்த வாரம் ஒரு பேச்சுவார்த்தை அழைப்பு விடுக்கப்பட்டது. 

ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர்கள் பல சாலைகளை மதித்துள்ளனர். 

மக்கள் தங்களது வாகனங்களில் தொட்டிகளை நிரப்ப பல மணி நேரம் அலைகின்றனர்.இந்தநிலையில் அரசாங்கம் இந்த இயக்கத்தை நிலை நிறுத்த தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு உத்தரவுகளை பிறப்பிக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து பிரஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நேற்று இந்த விவகாரம் விரைவில் தீர்க்க அரசாங்கம் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்யும் என உறுதி அளித்துள்ளார்.