இந்தியாவில் 41½ கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர்: ஐ.நா. அறிக்கை

Prasu
1 year ago
இந்தியாவில் 41½ கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர்: ஐ.நா. அறிக்கை

ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டமும் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலகத்தில் 111 நாடுகளில் 120 கோடிபேர், அதாவது 19.1 சதவீத மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். 

அவர்களில் பாதிப்பேர், அதாவது 59 கோடியே 30 லட்சம்பேர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தியாவை பொறுத்தவரை, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம்பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். 

குறிப்பாக, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2015-2016 நிதிஆண்டுக்குள் 27 கோடியே 50 லட்சம் பேரும், 2015-2016 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 14 கோடி பேரும் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டார்கள். 

இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க மாற்றம். 2030-ம் ஆண்டுக்குள், வறுமையில் வாழும் ஆண், பெண், குழந்தைகள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இதே ரீதியில் சென்றால், அந்த இலக்கை எட்டுவது சாத்தியமானதுதான். இந்த முன்னேற்றத்தையும் மீறி, 2020-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி, உலகிலேயே அதிகமான ஏழைகள் இருப்பது இந்தியாவில்தான். அங்கு 22 கோடியே 89 லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள். 

அதற்கு அடுத்த இடத்தில்தான் நைஜீரியா (9 கோடியே 67 லட்சம்) உள்ளது.