நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Prathees
1 year ago
நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, நீர் வழங்கல் சபையின் தலைவருடன் நடத்திய கலந்துரையாடலில், நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கான தீர்மானத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் கட்டணங்களை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரின் ஆலோசனையின் பேரில், அதுவரை எந்த ஒரு பபாடசாலையின் குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டாம் என நீர் வழங்கல் சபை முடிவு செய்துள்ளது.