பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவு

Kanimoli
1 year ago
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவாகியுள்ளார்.

இந்த ஆண்டின் முதல் டோரி தலைமைப் போட்டியில் லிஸ் ட்ரஸ்ஸிடம் தோற்று ஏழு வாரங்களுக்குப் பிறகு, ரிஷி சுனக் இதில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் இங்கிலாந்தின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.மேலும் இங்கிலாந்து மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதால் பதவியேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக்கிற்கு 166 டோரி எம்.பிகளும், பென்னி மோர்டான்ட்-க்கு 25 டோரி எம்.பிகளும் ஆதரவாக இருந்தனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகப் போட்டி இன்றி தேர்வாகியுள்ளார். பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார்.

புதிய பிரதமருக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 2 மணியுடன் முடிவடைய உள்ளதால் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் முடிவதற்குள் இறுதி நிமிடங்களில் டோரி தலைமைப் போட்டியில் இருந்து பென்னி மோர்டான்ட் வெளியேறிய பிறகு ரிஷி சுனக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படும் சூனக், 44 நாட்கள் மட்டுமே பிரதமர் பணியில் இருந்து விட்டு வெளிச்செல்லும் லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதிலாக, கிங் சார்ல்ஸால் அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்.