திலினி பிரியமாலியுடன் கூட்டு சேர்ந்து நடிகைகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு

Kanimoli
3 years ago
திலினி பிரியமாலியுடன் கூட்டு சேர்ந்து நடிகைகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு

   செல்வந்தர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திலினி பிரியமாலியுடன் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 6 நடிகைகளை சி.ஐ.டி. விசாரணைக்கு அழைத்துள்ளது.

அவர்களில் இருவரிடம் சி.ஐ.டி. வாக்கு மூலம் பதிவு செய்துள்ள நிலையில் ஏனைய நால்வரையும் வாக்கு மூலம் பெற வெவ்வேறு திகதிகளில் அழைத்துள்ளது.

செல்வந்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்களுக்கு அதனை திருப்பிச் செலுத்தாது, நடிகைகளுடன் அவர்களை பாலியல் தூண்டல்களை காட்டும் விதமாக உரையாட செய்து அவற்றை ஒலி, ஒளிப் பதிவு செய்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந் நிலையிலேயே இந்த 6 நடிகைகளும் இவ்வாறு சி.ஐ.டி. விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4