கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது

Kanimoli
3 years ago
கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது

கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.

குறித்த இரண்டு நபர்களும் சுமார் 10 வருட கால நண்பர்கள் ஆவர். அத்துடன், இருவரும் நீண்ட காலமாக லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த இருவருக்கும் லொட்டோ மேக்ஸில் $100,000 பரிசு விழுந்துள்ளது.

விக்கினேஸ்வரராஜா தான் பரிசு விழுந்ததை முதலில் கண்டுபிடித்துள்ளார். அவர் கூறுகையில், நான் பரிசு விழுந்ததை உறுதி செய்ததையடுத்து அதிர்ச்சியும் உற்சாகமும் ஒருசேர அடைந்தேன். பின்னர் உடனடியாக பரம்சோதிக்கு தொலைபேசியில் அழைத்து வர சொன்னேன் என கூறியுள்ளார்.

பரம்சோதி கூறுகையில், விக்கினேஸ்வரராஜா தகவல் சொன்னவுடன் உடனே gas stationக்கு ஓடினேன், பரிசு விழுந்தது மிகவும் ஆச்சரியம் கொடுக்கிறது. தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட அழகான வழி என கூறியுள்ளார்.

பரிசு பணத்தை தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்வதோடு, நன்கொடை வழங்கவும் விக்கினேஸ்வரராஜா திட்டமிட்டுள்ள நிலையில் முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள பரம்சோதி திட்டமிட்டுள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4