வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 08ஆம் திகதி!

Mayoorikka
3 years ago
வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 08ஆம் திகதி!

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (27) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க நபவம்பர் 14ஆம் திகதி பி.ப 1.30 மணிக்கு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பித்து உரையாற்றுவார்.


ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன், இதன் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 22ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன், டிசம்பர் 08ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்த இணங்கப்பட்டது.

இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 08ஆம்
திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.


வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்விகளக்காக நேரத்தை ஒதுக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், டிசம்பர் 09ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான காலப் பகுதி 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்ட விவாதம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெறவிருப்பதுடன், பி.ப 5.30 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான நேரம் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை அல்லது சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4