அமெரிக்காவிற்கு பயணமாகவிருந்த ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 08.15 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான KR-655 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
முதலில் கட்டுநாயக்கவில் இருந்து கட்டார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல ரஞ்சன் ராமநாயக்க திட்டமிட்டுள்ளார்.
அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலும், அந்த நீதிமன்றங்களால் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் கணனி அமைப்பில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.