யாழ் ராணியின் நேர முகாமைத்துவம் அண்மைக் காலங்களில் மிக மிக மோசமாகி வருவதாக ஊழியர்கள் அசௌகரியம்

Kanimoli
1 year ago
 யாழ் ராணியின் நேர முகாமைத்துவம் அண்மைக் காலங்களில் மிக மிக மோசமாகி வருவதாக ஊழியர்கள் அசௌகரியம்

கிளிநொச்சி உத்தியோகத்தர்களுக்கு சிறந்த வரப்பிரசாதமாக இருந்து வந்த யாழ் ராணியின் நேர முகாமைத்துவம் அண்மைக் காலங்களில் மிக மிக மோசமாகி வருவதாலும் இயந்திரத்தின் இயங்கு திறன் மிகவும் கீழ்த்தரமாக இருப்பதனாலும் ஊழியர்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ் உள்ளூர் பிரதேசங்களிலிருந்து வரும் ஊழியர்கள் நள்ளிரவில் வீடு திரும்புவதால் அவர்களின் குடும்பத்தாரும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். உரிய அதிகாரிகளே இது உங்கள் தயவான கவனத்திற்கு