நாட்டில் மேலும் 02 கொவிட் மரணங்கள் பதிவு
Mayoorikka
1 year ago
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர்கள் இருவரும் 27 ஆம் திகதி உயிரிழந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட ஆண் ஒருவரும், 60 வயதிற்கும் மேற்பட்ட பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 6 இலட்சத்து 71 ஆயிரத்து 51 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.