பிக்குகளின் அன்னதான நடவடிக்கையால் அசௌகரியத்திற்கு உள்ளான மஹரகம பெண்கள் பாடசாலை மாணவிகள்
மஹரகம பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சம்பவமொன்று தொடர்பில் ஊடகமொன்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பாடசாலையில் உள்ள நான்கு துறவிகள் மாணவர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்குமாறு தெரிவித்திருப்பது தெரியவந்தது.
அதன்படிஇ ஒவ்வொரு மாணவியும் கொண்டு வர வேண்டிய உணவு மற்றும் இதர பொருட்களின் பட்டியல் இங்கு தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களில் இந்த பட்டியலில் 20 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உள்ளன.
சில பட்டியல்களில் 25 பாற்சோறு துண்டுகள் மற்றும் 60 இடியப்பம், பேரீச்சம்பழ துண்டுகள்இ இறைச்சி மற்றும் மீன் ஆகியவை அடங்கும்.
ஒரு மாணவர் 25 பால் சாதம் கொண்டு வர வேண்டும்.
சில மாணவர்கள் அன்னதானத்திற்காக இறால் கறி கொண்டு வரச் சொல்லப்பட்டுள்ளனர்.
தானம் மட்டுமின்றி பரிசும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வகுப்புக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினை மற்றும் சிறுவர்கள் இதனால் பாதிக்கப்படும் பின்னணியில் இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்க முடியாது என நெத் நியூஸுக்கு தகவல் வழங்கிய மக்கள் தெரிவித்துள்ளனர்.