சிறார்களிடையே இன்புளுவென்சா தொற்று அதிகரிப்பு!

Mayoorikka
3 years ago
சிறார்களிடையே இன்புளுவென்சா தொற்று அதிகரிப்பு!

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வாந்தி முதலான நிலைமைகள் தொடர்ந்தால், சிறார்களை, பாடசாலைக்கோ அல்லது பராமரிப்பு நிலையங்களுக்கோ அனுப்புவதைத் தவிர்க்குமாறு கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின், சிறுவர் நோய் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.
சிறார்களிடையே இன்புளுவென்சா வைரஸ் பரவும் நிலை அதிகரிப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக உள்ளதென எமது செய்திச் சேவை வினவியபோது அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடன் குளிரான காலநிலை காணப்பட்டது. இதன் காரணமாக சிறார்களிடையே காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வாந்தி முதலான நோய்யறிகுறிகள் அதிகரித்தன.

அவர்களில் சிலரது மாதிரிகளை பரிசோதணைக்குட்படுத்தியதில் இன்புளுவென்சா வைரஸ் பரவல் அதிகரித்தது.

இன்புளுவென்சா வைரஸ் வேகமாக பரவும் எனவே சிறார்களிடையே குறித்த நோய் அறிகுறிகள் அதிகரித்தால் அது இன்புளுவென்சா நோய்த் தொற்றாக இருக்க கூடும்.

இந்த அறிகுறிகள் தென்படும் சிறார்களை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். குறிப்பாக அந்த சிறார்களுக்கு பரசிடமோல் மாத்திரை வழங்குவதுடன், இயற்கையான நீர் ஆகாரங்களை வழங்கி ஓய்வளிக்க வேண்டும்.

இந்த சிறார்களை பாடசாலைகளுக்கோ அல்லது பராமரிப்பு நிலையங்களுக்கோ அனுப்பினால் ஏனைய சிறார்களுக்கும் இந்த தொற்று விரைவில் பரவும். எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின், சிறுவர் நோய் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4