அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மூத்த சகோதரரின் மகன் பிணையில் விடுதலை

Kanimoli
3 years ago
 அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மூத்த சகோதரரின் மகன் பிணையில்  விடுதலை

யால தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வாகனங்களை ஓட்டியமை தொடர்பில் வன ஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மூத்த சகோதரரின் மகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று கைது செய்யப்பட்டு 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக,சம்பவம் தொடர்பில் ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக,யால தேசிய பூங்கா சம்பவத்தில் தனது மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர் அமரவீர, சம்பவம் நடந்த நாளில் தனது மகன் காலிக்கு அப்பால் பயணம் செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இருந்தால் அரசியலில் இருந்து விலகுவேன் என அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4