இலங்கை அரசாங்க காட்டுப் பகுதியில் விதைக்குண்டு தாக்குதல்

Kanimoli
1 year ago
இலங்கை அரசாங்க காட்டுப் பகுதியில் விதைக்குண்டு தாக்குதல்

பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இலங்கை விமானப்படை இணைந்து வத்தேகம கபிலித்த அரசாங்க காட்டுப் பகுதியில் ஏழாவது விதைக்குண்டு தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவின் வழிகாட்டலின் கீழ் இது இடம்பெற்றது.

இதன் அடிப்படையில் தாவர விதைகள் பந்துகளாக உருட்டப்பட்டு,வானிலிருந்து தரை நோக்கி பரவலாக வீசப்பட்டுள்ளது.