அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கற்பிக்கப்படும்!

Mayoorikka
3 years ago
அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கற்பிக்கப்படும்!

அடுத்த வருடம் (2023) பாடசாலைகளில் தரம் 10ற்க்கு செயற்கை நுண்ணறிவை (AI) பாடமாக அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய கல்வி அமைச்சர், இலங்கையின் கல்வி அமைப்பில் தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கல்வி முறையானது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும்
அனைத்து ஆசிரியர்களும் தமது கல்விப் பாடங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4