சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது

Kanimoli
1 year ago
சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த எரிபொருள் நன்கொடையானது நாட்டின் விவசாயம் மற்றும் மீன்பிடி உட்பட மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.