மைத்ரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது
Kanimoli
1 year ago
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், நாட்டில் அண்மைக்காலங்களில் கொரோனா தொற்று குறைவடைந்திருந்த நிலையில் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.