பெல்ஜியத்தில் போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்திக்கொன்ற மர்மநபர் - பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Prasu
1 year ago
பெல்ஜியத்தில் போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்திக்கொன்ற மர்மநபர் - பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரஸ்சல்சில் உள்ள வடக்கு ரெயில் நிலையம் அருகே இரண்டு போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் இரண்டு போலீஸ் அதிகாரிகளை கத்தியால் சரமாரியாக குத்தினார். 

இதில் பலத்த காயம் அடைந்த 2 அதிகாரிகளும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

அவர்கள் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மர்மநபரின் வயிறு மற்றும் காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் காயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் மர்மநபரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். 

அவருக்கு கழுத்தில் கத்திக்குத்து காயம் பலமாக ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, 

"ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தார். 

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? போன்ற விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. 

இச்சம்பவம் பெல்ஜியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு கூறும்போது, "எனது எண்ணங்கள், இறந்த அதிகாரியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அதிகாரி நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன். 

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் தங்களது உயிரை பயணம் வைக்கிறார்கள் என்றார்.