ஆஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Nila
1 year ago
ஆஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை பெறுவதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சட்டத்தரணிகள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் சட்டப்பிரிவின் முன்னாள் தலைவர் கலாநிதி சானக்க சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பிணை பெறுவதற்கான பணத்தைக் சேகரிப்பதில் தற்போது கிரிக்கெட் நிறுவனம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணிகள் குழு வழங்கு விசாரணை இன்றி இதனை தீர்த்து வைக்க முயற்சித்து வருவதாக கலாநிதி சானக்க சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.