பணத்தை கொள்ளையடித்து பிளேடால் வயிறு மற்றும் தோள்பட்டைகளை அறுத்துக்கொண்ட நபர் கைது

Prathees
3 years ago
பணத்தை கொள்ளையடித்து பிளேடால் வயிறு மற்றும் தோள்பட்டைகளை அறுத்துக்கொண்ட நபர் கைது

மூன்று கொள்ளையர்கள் தம்மை தாக்கி 1,86000 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கடந்த 10ஆம் திகதி பொலிஸில் பொய் முறைப்பாடு செய்து கைது செய்யப்பட்டதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.

ஹினிதும பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளையர்களை காயப்படுத்தியதைக் குறிக்கும் வகையில் வயிறு மற்றும் தோள்களில் பிளேடால் வெட்டியதாகவும் இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கர்ப்பிணியாக உள்ள தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் 1,86000 ரூபாவை பெற்றுக்கொள்வதற்காக சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் தவலமவில் அமைந்துள்ள ராஜ்ய வங்கிக்கு வந்துள்ளார்.

சகோதரி வங்கியில் இருந்து பணத்தை எடுத்து  சந்தேக நபரிடம் கொடுத்துள்ளார் அதன் பின்னர் அவளை ஒரு பேருந்தில் ஏற்றி விட்டுஇ குறித்த நபர் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

முச்சக்கரவண்டியில் தான் பயணித்துக்கொண்டிருந்த போது மூன்று கொள்ளையர்கள் தம்மை தாக்கி காயப்படுத்திவிட்டு 1,86000 ரூபா பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகுஇ மேலும் வாக்குமூலம் பெற காவல்துறைக்கு வருமாறு கூறப்பட்டது.

வயிறு மற்றும் தோள்பட்டையின் இரு பக்கங்களிலும் ஏற்பட்ட காயங்கள் தானாக ஏற்படுத்தியதாக அவதானிக்கப்படுவதாக வைத்தியசாலையின் வைத்தியர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சந்தேகநபரின் மேலதிக வாக்குமூலத்தில் பொலிஸில் பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தோள் மற்றும் வயிற்றை வெட்டிய கத்தியும் காணப்பட்டது.

திருடப்பட்டதாக கூறப்படும் பணமும் அவரிடமிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4