சுவிஸ்-சொலத்தூர்ன் மாநில ஓல்டன் பகுதியில் நகைக்கடையை கொள்ளையடித்த இரு இளைஞர்கள் கைது

Prasu
1 year ago
சுவிஸ்-சொலத்தூர்ன் மாநில ஓல்டன் பகுதியில் நகைக்கடையை கொள்ளையடித்த இரு இளைஞர்கள் கைது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு Olten இல் உள்ள Baslerstrasse பகுதியில் உள்ள நகைக் கடையில் இரண்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து குற்றவாளிகள் என்று கருதப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 22, மற்றும் அக்டோபர் 11, 2022 ஆகி தினங்களில் இரவு ஓல்டனில் உள்ள Baslerstrasse நகைக் கடை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் திருடப்பட்டன.

பின்னர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்காவ் கன்டோனல் போலீசாரால் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் சுவிட்சர்லாந்தில் நிரந்தர குடியிருப்பு இல்லாத ரோமானியர்கள் எனத் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருட்டில் ஈடுபட்ட நபர்கள் இருவரும் 20 வயது நிரம்பிய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.