சூரியவெவ படகு விபத்தில் காணாமல் போன மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் மீட்பு

Prathees
1 year ago
சூரியவெவ படகு விபத்தில் காணாமல் போன மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம்  மீட்பு

சூரியவெவ மஹாவெலிகடார ஏரியில் படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சூரியவெவ மஹாவெலிகடார ஏரியில் படகு கவிழ்ந்ததில் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதுடன், விபத்தின் போது படகில் 8 பேர் பயணித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் படகில் பயணம் செய்த குழந்தை உள்பட 5 பேரை கிராம மக்கள் காப்பாற்றினர்.

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட 8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 18 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகளே காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் உறவினர் நிகழ்வு ஒன்றிற்காக இந்த பகுதிக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அப்போது ஏரியின் நடுவே படகு கவிழ்ந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.