போராட்டத்தின் தாய்மார்கள் என்று கூறிய இரு பெண்கள் கைது

Prathees
1 year ago
போராட்டத்தின்  தாய்மார்கள் என்று கூறிய இரு பெண்கள் கைது

போராட்டத்தின் தாய்மார் என அறிமுகப்படுத்தி களுத்துறையில் இருந்து காலி முகத்திடலுக்கு பேரணியாகச் சென்ற இரண்டு பெண்கள் பாணந்துறை கோரக்காபொல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு இடையூறாக இருந்ததாக மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆணும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் அவர்களை கைது செய்வதற்கான ஆயத்தங்களுடன் சென்றவேளை, இருவரும் பேருந்தில் ஏறி பாணந்துறை கோரக்காபொல பகுதியை வந்தடைந்துள்ளனர். அங்கு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.