நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை எதிர்ப்பார்ப்பு!

Reha
1 year ago
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை எதிர்ப்பார்ப்பு!

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் உறைபனியுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.