மாணவர்களுக்கான காப்புறுதி தொகை குறைப்பு?

Prabha Praneetha
1 year ago
மாணவர்களுக்கான காப்புறுதி தொகை குறைப்பு?

பாடசாலை செல்லும் மாணவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் இறப்புக்கான சுரக் ஷா காப்பீட்டுத் தொகையை 200,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாகக் குறைத்த அரசாங்கம், இந்த காப்புறுதி தொகையை பெறுவோர், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஒதுக்கப்படும் அதிகபட்ச தொகை ஒரே குடும்பத்தில் உள்ள பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.