ஹிருணிகா உட்பட 15 பேர் கைது

Prathees
1 year ago
ஹிருணிகா உட்பட 15 பேர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பல குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஒரு குழுவினர் இன்று (14) காலை பெண்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்கள் குழுவை விடுவிக்குமாறு கோரி  ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர்.

இதன்போது ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்தனர்.