சுவிஸ் நாட்டில் தமிழர் புத்தகத் திருவிழாவும் புத்தக வெளியீட்டு விழாவும்

Prasu
1 year ago
சுவிஸ் நாட்டில் தமிழர் புத்தகத் திருவிழாவும் புத்தக வெளியீட்டு விழாவும்

நேற்றும், நேற்று முந்தினமும் (12, 13)  சுவிற்சர்லாந்து நாட்டில் திரு ஃபௌசர் அவர்களாலும் அவரது தோழர்களாலும் முன்னேடுத்து ஒரு  தமிழ்ப் புத்தகத் திருவிழா நிகழ்த்தப்பட்டது. 

அந்நிகழ்வு சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அந்த நிகழ்வு புத்தகக் கண்காட்சியும் விற்பனையுமாக மட்டும் அமைந்துவிடாது பல நூல்களின் அறிமுக விழாக்களாக.. வெளியீட்டு விழாக்களாக..நூல் விமசர்சன நிகழ்வுகளாக நிகழ்ந்தேறியது குறிப்பிடத்தக்கது..

திருமதி சங்கரி சிவகணேசன் அவர்களின் "அரூப நிழல்கள்', திருமதி கமலினி கதிர் அவர்களின் "சந்தோச ராகங்கள்" திரு அமரதாஸ் அவர்களின் "Through The Fire zones" போன்றன குறிப்பிடத்தக்கன.