பஸ்ஸொன்று பாடசாலை மாணவனால், நுவரெலியா நகரில் செலுத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவு

Kanimoli
1 year ago
 பஸ்ஸொன்று பாடசாலை மாணவனால், நுவரெலியா நகரில் செலுத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவு

மாத்தறை பிரதேசத்திலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பஸ்ஸொன்று பாடசாலை மாணவனால், நுவரெலியா நகரில் செலுத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று குறித்த மாணவனால் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.​

நேற்றைய தினம் இந்த மாணவன் பஸ்ஸை செலுத்திச் செல்லும் காணொளி ​ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.