பிரித்தானியா சென்ற விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு

Nila
1 year ago
பிரித்தானியா சென்ற விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு

பிரான்ஸின் நேந்த் விமான நிலையத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினில் இருந்து பிரித்தானியா சென்ற Jet2 விமானமே இவ்வாறு  தரையறிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரம் நோக்கி விமானம் சென்றுக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையினால் விமானத்தில் பரபரப்பான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த பயணியினால் விமானப் பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததைத் தொடர்ந்து,  நோந்த் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டண விமான நிறுவனமான Jet2 இன் விமானத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் பயணிகளியே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதனையடுத்து நோந்த் அத்லோன்டிக் (Nantes-Atlantique) விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிரித்தானிய நகரமான லீட்ஸை ஸ்பெயின் நகரமான அலிகாண்டேவுடன் இணைக்கும் விமானத்தில் 66 வயதான பிரித்தானயர் ஒருவர இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

பானங்கள் விநியோகம் செய்யும் போது, பெண் பணியாளரிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின்னர் நேந்த் விமான நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகளிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

குறித்த நபரை சோதனையிட்ட போது ஒரு லிட்டர் இரத்தத்திற்கு 2.2 கிராம் மதுபானம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!