பற்றாக்குறையான மருந்துகளை உடனடியாக கொண்டு வர சுகாதார அமைச்சு நடவடிக்கை: கெஹலிய ரம்புக்வெல்ல
Mayoorikka
1 year ago
இலங்கைக்கு பற்றாக்குறையாக உள்ள சுமார் 130 வகையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அந்த மருந்துகள் 03 மாதங்களுக்கு போதுமானதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
2 வருடங்களுக்கு முன்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்த நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.