ஆற்றில் இளம் ஜோடி குதித்து தற்கொலை

Kanimoli
1 year ago
ஆற்றில் இளம் ஜோடி குதித்து தற்கொலை

கம்பஹா மினுவங்கொடை ஓபாத, சமுர்த்திகம பிரதேசத்தின் ஊடாக ஓடும் தெதுரு ஓயா ஆற்றின் கிளை ஆற்றில் இளம் ஜோடி குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மினுவங்கொடை யட்டியன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான கே.லக்சானி தில்மிக்கா கீர்த்திரத்ன என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மினுவங்கொடை சமுர்த்திகம நுககஹாமுல்ல பாலத்திற்கு அருகில் நேற்று உரிமையாளர் இல்லாத உந்துருளி ஒன்று கிடந்துள்ளது.அது குறித்து பிரதேசவாசிகள் கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து உந்துருளியில் வந்தவர்கள் ஆற்றில் குதித்துள்ளனரா என்று தேடி பார்த்த போது யுவதியின் சடலம் கிடைத்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டுள்ள யுவதி, 7 மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் விருப்பமின்றி வீட்டில் இருந்து வெளியேறி, இளைஞர் ஒருவருடன் நேதகமுவ பிரசேதத்தில வீடொன்றில் வசித்து வந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுவதியின் மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணைகள் இன்று மதியம் நடத்தப்பட்டன. இதனையடுத்து சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக திடீர் மரண விசாரணைகள் நாளைய தினம் வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், மினுவங்கொடை காவல்துறையினரும், பிரதேசவாசிகளும் இணைந்து இளைஞனின் சடலத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!