உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை

Kanimoli
1 year ago
உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை

உலகின் மிகப்பெரிய ஒற்றை இயற்கை நீல நட்சத்திர சபையர் மாணிக்கக் கல் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை.
இதனையடுத்து, அது, சுவிட்சர்லாந்தில் இருந்து டுபாய்க்கு மாற்றப்படுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்
சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சி 2023 இன் முதல் பதிப்பை அறிவிக்கும் நேற்றைய நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நீல மாணிக்கக்கல் கொத்து இன்னும் விற்பனை செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 503.2 கிலோ எடையுள்ள நட்சத்திர சபையர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறினார்.
இது,  2022 பெப்ரவரி 24ஆம் திகதியன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஆய்வகத்தால், உலகின் மிகப்பெரிய சபையர் மாணிக்கக்கல்லாக அங்கீகரிக்கப்பட்டது.
எனினும் இந்த மாணிக்கக்கல்லை வாங்குபவரை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, எனவே, அதனை துபாய்க்கு மாற்ற முடிவு செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைக்கு, கடந்த பத்து மாதங்களில் 355 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக குறிப்;பிட்ட அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டுவது எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!