டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.40 கோடி பெறுமதியிலான தங்கம் பறிமுதல்

#Arrest
Keerthi
1 year ago
டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.40 கோடி பெறுமதியிலான தங்கம் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். 

அப்போது குறிப்பிட்ட 2 பயணிகளின் உடமைகளில் ஆயிரத்து 849 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட அந்த நகைகளை அதிகாரிகள் கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர். அதைப்போல மேலும் 2 பயணிகளின் உடமைகளில் 914.5 கிராம் எடையுள்ள 2 தங்கக்கட்டிகள் இருந்தன. 

அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள். கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1.40 கோடி ஆகும்.